Friday, December 26, 2014

கோட்சேவின் பெயரால் விருது கொடுப்போம் !

நாதுராம் வினாயக் கோட்சேவை தெரியாதவர்கள் காந்தியைக் கொன்ற இந்து மகா சபை உறுப்பினர் என்றால் உலகுக்கே தெரியும். காந்தியைக் கொன்றதன் மூலம் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டும் விதமாக தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டது தொடங்கி சாவர்கர், மாளவியாக்களின் அங்கீகரிக்கப் பட்ட பிரதிநிதி அல்லவா கோட்சே.



பாஜகவின் ஆட்சியை இந்து மத வெறியர்களின் ஆட்சி, பஜகோவிந்தங்களின் ஆட்சி, காவிகளின் ஆட்சி என்று விமர்சித்தால் நம்மை ஏதோ தாலிபான்களின் அளவுக்கு வெறுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் இந்த இடைச்சாதி இந்துக்கள். அவர்கள் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாக எழுதுபவனின் அறிவைச் சோதிக்கும் விதமாக சில நண்பர்கள் அறிவாளித்தனமாக நம்மை சொறிய ஆரம்பித்து விடுகிறார்கள்.

கோட்சே பற்றியோ மாளவியா பற்றியோ வாஜ்பாய் பற்றியோ அத்வானி பற்றியோ ஏன் மோடியைப் பற்றியோ சொல்ல ஒன்றுமே இல்லை. பாபர் மசூதி இடிக்க முக்கிய காரணமான அத்வானி, வெள்ளைக்கார துரைகளுக்கு உளவு வேலை பார்த்த வாஜ்பாய், குஜராத் கலவரங்களின் பிதா மகன் மோடி, பூரண இந்துத்துவ நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று முழங்கிய மாளவியா குறித்து நல்லவிதமாக எதாவது இருந்தால் அல்லவா இவர்கள் நம் எழுத்தை விமர்சிக்க முடியும்?

கோட்சேவுக்கு கோவில் கட்டுகிறார்கள் காந்தியின் நினைவு நாளில் திறக்கப் போகிறார்களாம், கூடவே, இந்திராவைக் கொன்ற சீக்கியருக்கும், அதற்கு காரணமான பிந்தரன் வாலேவுக்கும், ராஜீவைக் கொன்ற தனுவுக்கும் சிவராசனுக்கும், பிரபாகரனுக்கும் சிலைவைக்கப் போகிறோம் என்று யாராவது கிளம்பினால் என்ன ஆகும் என்று நினைக்கும் போதே பயந்து வருகிறது.

வாஜ்பாயிக்கும் , மாளவியாவுக்கும் பாரத ரத்னா கொடுக்கிறார்களாம் கொடுக்கட்டும் இன்னும் இருக்கும் மிச்ச சொச்ச ஆட்சியின் சொற்ப நாட்களிலும் அமித் ஷாவுக்கும் , கலைஞரின் தலைக்கு விலைவைத்த ராம்விலாஸ் வேதாந்திக்கும் இன்னபிற பார்பனீய, இந்து வெறி எதிர்ப்பாளர்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கும் எச்ச ராஜாக்களுக்கும் கொடுத்துக் கொள்ளட்டும்.

காவிகளின் வேர் ஆழ ஊன்றிக் கிடக்கும் இந்நாட்டில் இன்னும் ஆயிரம் ஆயிரம் கூத்துக்களும் அரங்கேறப் பார்ப்பதென்னவோ உண்மைதான் ஆனால் இவர்களின் கையில் ஆட்சி கிடைத்த பின் ஊடகங்களால் ஊதிப் பெருக்க வைக்கப் பட்ட ஶ்ரீமான் மோடியின் தர்பார் என்னவோ காத்தாடிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

நாட்டை வளப்படுத்தும் பொருளாதார மேதைகள் இல்லாத சுகாதாரத்துக்கான செலவில் கூட 6000 கோடிகளை குறித்து வல்லபாய் பட்டேலுக்கு பல்லாயிரம் கோடிகளில் சிலை வைக்கத் துடிக்கும் ஆட்களின் கைய்யில் அல்லவா ஆட்சி இருக்கிறது.? பாவம் அவர்கள் மட்டும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட புத்திசாலிகள் அல்லவா?

காஷ்மீரிலும் ஜார்கண்டிலும் வெற்றி பெற்று விட்டோம் என்றூ கொக்கரிக்கிறார்கள் ஆனால் காஷ்மீரில் வென்ற தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் டெப்பாசிட் கூட பறிபோன விஷயத்தை மூடி மறைக்கிறார்கள்.

கல்வி, மருத்துவம், சுகாதாரம், உள் கட்டமைப்பு என்று எந்த ஒரு அரசு, மக்கள் நலம்  சார்ந்த கொள்கைகளும் இல்லாமல் , வாஜ்பாயி , அத்வானி மோடி அமித்ஷா என்ற பிம்பங்களின் தயவில் ஆட்சிக்கு வந்தவர்களிடம் கோட்சேவுக்கும் மாளவியாவுக்கும் வாழ்த்துக்களும் வீர வணக்கங்களும் தவிற வேறென்ன எதிர்பார்க்க முடியும். பஜகோவிந்தங்களின் ஆட்சி என்பது இன்னும் கொஞ்ச நாட்களின் முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்கப் போகிறது என்பதை கருப்புப் பண விவகாரம், பெட்ரோல் விலை, ஊழல் எதிர்ப்பு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு என்று எல்லாவற்றிலும் பார்த்துவிட்டொம்.

கூட இருந்தே கோஷ்டி காணம் பாடி என்னவோ திமுகவும் காங்கிரசும் மட்டும்தான் ஊழலின் வித்து, ஈழத்தின் எதிரி என்பதாய் பரப்புரைகளை வெளியிட்டு வஞ்சம் தீர்த்துக் கொண்ட செவ்வாழைகள், கொஞ்சம் கொஞ்சமாய் புளி மூட்டைக்குள் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்
விளக்கத்துக்கு வினவின் கட்டுரை படியுங்கள்.

திராவிடம் என்றாலே உச்சா போய்க்கொண்டு ஆர் எஸ் எஸ்ஸின் பெயரைக்கூட தமிழகத்தில் உச்சரிக்க பயந்துகொண்டிருந்த எச்ச. ராஜாக்கள் எல்லாம் இன்று ரங்கராஜ் பாண்டேக்களின் தயவால் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கோட்சே புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கூடவே கொங்கு ஈஸ்வரன் என்ற ஜால்ராவும்.

அத்வானிக்கு கோவையில் குண்டு வைத்தார்கள் என்று உண்மைக் குற்றவாளிகள் என்று யாராவது கிடைத்தால் அவர்களுக்கும் சிலைவைப்போம் என்று கிளம்பினால் அப்போதும் இந்த மகா சபைகள் மவுனம் காத்து வரவேற்கும் என்று நம்புவோமாக.

பாஜக என்னும் ஆட்சியில் இருக்கும் ஒரு முகத்தை வைத்துக் கொண்டு காவிகள் தங்களின் எல்லா ஆசைகளையும் இந்த ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றிக் கொள்ள துடிப்பது என்பது பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுப்பதற்குச் சமம் என்பதை யாராவது சோக்களோ, இல்லை பத்ரிக்களோ அவர்களிடம் சொன்னால் பரவாயில்லை. பொன்முட்டை கிடைக்காவிட்டால் அவர்களுக்கு நஷ்டம் இல்லை, நம் உயிரல்லவா போகிறது.

சிறுபான்மை மக்களின் நலனுக்கு எதிராகவே எப்போதும் நடக்கும் பாஜக சங் பரிவாரங்களின் சங்கறுக்கும் வேலை தொடங்கும் முன் விழித்துக் கொள்வோம் இல்லாவிட்டால் வரலாற்றை திரித்து எழுதும் பஜகோவிந்த பன்னாடைகள் கோட்சே பெயரில் ஒரு விருதை உண்டாக்கி காந்திக்கு கொடுத்து விடுவார்கள்.



No comments: