Monday, November 26, 2007

காணாமல் போனவர்கள் -புதிர் பரிசுப் போட்டி

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு.

குறிப்பு 1 : நீண்ட நாட்களாக அசராமல் அடித்து ஆடிக் கொண்டிருந்தார். தன் மேல் சாதி முத்திரையையும் குத்திக் கொண்டார். இவர் நகைச்சுவை மன்னன் தண்ணி காட்டுவதில் அண்ணன். திடீரென்று பரபரப்பை ஏற்படுத்துவார். கூட்டம் சேர்ந்து குமுறுவார்கள் என்று நினைத்தால் பதுங்கிவிடுவார். இன்னும் ஸ்டேட்டஸ் லைவாகத்தான் இருக்கிறது. இவர் காட்டானா ? நாட்டாமையா ? நல்லவரா ? அவர் யார் ?

குறிப்பு 2 : கோழிபிடிப்பது, தேங்காய் பொறுக்குவது செய்தாலும் இவரும் ஒரு கதாநாயகன் தான். இவரோட மொக்கையே வெள்ளிவிழா கொண்டாடும் அளவுக்கு ரசிக்கப்பட்டு இருக்கிறது. இவர் ஒரு மாதிரியானவரா ? இவர் டவுசரை பலரும் கழட்டிவிட்டார்கள். இப்போது எங்கே செட்டில் ஆனார் என்று தெரியவில்லை. ஆயாவைத்தான் இவருக்கு மிகவும் பிடிக்கும் ஐ மீன் அம்மா.

கண்டுபிடிப்பவர்களுக்கு இலவசமாக 'நச்சுன்னு' 2 அழகிய தமிழ் மகன் பட நுழைவு சீட்டு கொடுக்கப்படும்.

Saturday, November 24, 2007

விசயகாந்துக்கு ஒரு வில்லங்க கடிதம் !

அய்யா வணக்கம்ங்க!
நான் குவாட்டர் கோவிந்தன், கொஞ்சநாளா காணாம போயிட்டு இப்போதான் திரும்ப வரேனுங்க. ரொம்ப நாளாவே உங்களுக்கு ஒரு கடுதாசி எழுதனும்னுதான் முயற்சி பன்றேன் ஆனா பாருங்க சேது சமுத்திரம், குஜராத் படுகொலை, தமிழ்ச்செல்வன் மரணம்னு ஒரே அல்லோலகல்லோலமா போச்சி அதனால இப்போதான் உங்களுக்கு எழுத முடியிது.
சரி நம்ம கதை எதுக்குங்க உங்களுக்கு சொல்லவேண்டியத நான் சொல்லிட்டு போறேனுங்க. வர வர கொஞ்சநாளா எனக்கு உங்க பேட்டிய படிச்சா உங்கமேல ஒரு மதிப்பு வரதுக்கு பதிலா காமெடி காலனி லூசுப்பையன் பேட்டி படிச்ச மாதிரி ஒரே சிரிப்பா வருதுங்க ஏன்னா உங்க பேச்சு அப்படித்தான் இருக்குங்க.
அரசாங்கம்ன்னா என்னமோ நீங்க அபூ ஹை ஆபூ ஹைன்னு சண்டை போடுறது போல அவ்ளோ ஈசி கிடையாதுங்க. அது உழைச்சாத்தான் கைக்கு கிடைக்கும். நாப்பத்தி ஒம்போதில கட்சி ஆரம்பிச்ச அண்ணா பதினெட்டு வருசம் கழிச்சித்தான் ஆட்சிய பிடிக்க முடிஞ்சது இதுக்கு அவங்க எல்லாரும் ஏற்கனவே ஏகப்பட்ட தியாகங்களை செய்திருந்தாங்க நீங்க உங்க மண்டபத்த தியாகம் பன்னினதா சொத்தை தியாகம் பன்னினதா சொல்லிச் சொல்லியே ஆட்சிய பிடிக்கலாம்னு யோசிக்கறீங்க.
இதெல்லாம் கிடக்கட்டும் விருத்தாசலத்தில் நீங்க கண்டிப்பா தோத்துத்தான் போவீங்கன்னு இருந்தப்போ ஜெயிச்சி வந்தீங்க அது உங்களுக்கு கிடைச்ச வெற்றிதான் இல்லேங்கலே ஆனா அதுக்கு பொறவு அந்த பக்கமே உங்களை பாக்க முடியலேன்னு சிலர் சொல்றாங்க ! கேட்டா ஷூட்டிங் போயிட்டதா சொல்றாங்களாம். விருத்தாசலம்தான் இனி என் ஊருன்னு சொன்னீங்க அட அங்கயே தங்கலைன்னாகூட ஒரு மாசத்துக்கு ஒரு தடவை போயிட்டு வரலாம்ல உங்களுக்கு எங்க நேரம் இருக்கு?. அரசாங்கம் படத்துக்கு டப்பிங் பேசனும் அடுத்த படத்துக்கு கதை புடிக்கனும்னு அலைஞ்சா ஒன்னுக்கும் நேரம் கிடைக்காதுங்க.
இதுபத்தி (குமுதம்) கேட்ட காலேஜ் பசங்ககிட்ட ஏன் கலைஞ்ர் கூட இன்னும் கதை எழுதறாரேன்னு கூலா சொல்றீங்க ஆமா அவரு எழுதுறாரு ஆனா தன்னோட அலுவல்களை ஒதிக்கிட்டு எழுதலீங்க இன்னிக்கும் அதிக நேரம் உழைக்கிற ஒரு அரசியல் தலைவர் இவர்தான். ஆனா நீங்க? மூனு மாசமா சூட்டிங், அரசியல் மாநாடு ஒரே டென்சன் ஓய்வே இல்லன்னு சொல்லி இராக்கு, துபாய்னு குடும்பத்தோட கெள்ம்பிடறீங்க. ஆனா கலைஞர் ஓய்வுக்காக இந்தியா தாண்டியதா நான் என்னோட வயசுக்கு கேள்விப்பட்டதில்ல.
இரண்டு கழகமும் தமிழ்நாட்ட கெடுத்துச்சின்னு சொல்லிட்டு நீங்களும் தே.மு.தி.கன்னு கட்சிப்பேர் வைக்கும்போதே தெரிஞ்சு போச்சிங்க உங்களுக்கு ஒன்னும் புதுசா அரசியல் பன்னத் தெரியாதுன்னு ஏன்னா திராவிடம்ங்கிர பேர வச்சு இங்கே அரசியல் பன்ன எந்த தகுதியும் உங்களுக்கு இல்ல.
நானும் திராவிடந்தான்னு நீங்க சொல்லிக்கலாம் ஆனா திராவிடன் அப்படீன்னா கருப்பா தென்னிந்தியாவுல பொறந்து திராவிட மொழிகளை பேசுனா மட்டும் திராவிடனாகிட முடியாதுங்க. அதுக்கு முதல்ல திராவிட கொள்கைகளை புரிஞ்சிக்கனும். உங்களுக்குன்னு ஒரு தனி கொள்கை வச்சுக்கனும் . ஒருவேளை எந்த கொள்கையும் வச்சுக்க கூடாதுங்கறதுதான் ஒங்க கொளுகையோ என்னமோ யாருக்கு தெரியும்.
சேது சமுத்திர விவகாரத்தை கலைஞர்தான் ஊதி பெருசாக்கிட்டதா சொல்றீங்க ஆனா நீங்க உங்களுக்குன்னு ஒரு கருத்து வச்சிருப்பீங்களே அத சொல்லுங்கய்யா. வேணுமா இல்லே வாணாமான்னு அத வுட்டு "வரும் ஆனா வராதுன்னு " காமெடி பன்றீங்க.
வாரிசு அரசியல் பத்தி வாய் கிழிய பேசுறீங்க ஆனா உங்க அரசியல் வண்டவாளம் எல்லாம் ராமுவசந்தன் பிரேமலதான்னு சுத்துதேன்னு கேட்டா வாயையும் இன்னொன்னையும் தொறக்காம "அவங்க என் உதவிக்கு இருக்காங்கன்னு சொல்றீங்க " மத்தவங்களும் அப்படித்தான்க. ஜெவுக்கு சசி கலைஞருக்கு ஸ்டாலின் :)
மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவா பேசுன நீங்க அரசாங்கம் மேலும் ஒரு ஆண்டு அதிக படிப்பை கட்டாயப் படுத்த கூடாதுன்னு சொல்றீங்க ஆனா ஒரு வருசமாவது கிராமங்களில் பணிபுரிய வேண்டும்னு சொல்றீங்க. அரசாங்கமும் (உங்க படமில்லைங்க) அதேதான் சொல்லுது. எனக்கு இப்போ ஒரு மண்ணும் வெளங்கல.
அதெல்லாம் கிடக்கட்டும் விருத்தாசலம் பீங்கான் டெக்னாலஜி மாணவர்கள் ஒரு பத்து பேர் பரிட்சை எழுத முடியாம இருந்தப்போ உங்களை பாக்க முயற்சி செஞ்சு முடியாம குமுதம் ரிப்போர்ட்டர் ஏற்பாட்டுல இப்போ படிக்கிறாங்க அதாவது தெரியுமா இல்லெயா?
அதே மாதிரி என்ன என்ன திட்டம் வச்சிருக்கீங்கன்னு கேட்டா அதெல்லாம் பொதுவில சொல்ல முடியாதுன்னு சொல்லுறீங்க. ஆயிரம் திட்டம் இலவசம்னு சொல்லியே கலைஞர் கூட்டணி ஆட்சி மாதிரிதான் ஜெயிக்க முடிஞ்சது உங்க நிலை பரிதாபமா ஆயிடும்.
புலிகள்னா உங்களுக்கு ரொம்ப புடிக்கும் ஈழத் தமிழர் நலன்ல உங்க ஈடுபாடெல்லாம் பாத்து நிறைய ஈழத் தமிழர்கள் உங்களை எல்லாம் நம்புறாங்களாம் பாவம் அவங்க அவங்களுக்கு ஆதரவா எதாவ்து செய்யலாம் பையனுக்கு பேர் மட்டும் பிரபாகரன்னு வச்சா போதாது. கன்னியா குமரிமுதல் காஷ்மீர் வரைக்கும் இருக்கும் தீவிர வாதிகள் பத்தின அப்டூ டேட் நியூஸ் எல்லாம் கைல வச்சிருக்கும் உங்களுக்கு பக்கத்தில இருக்க நாட்டுக்கு எதாச்சும் பன்னனும்னு தோனலியே?
நல்லவேளையா நீங்க கமல் ரேஞ்சுக்கு ஒன்னும் பெரிய நடிகர் இல்லை இல்லேன்னா ஒரு சாதாரண போலீஸ்காரன் எப்படி காஷ்மீர் தீவிரவாதிய புடிக்க முடியும் அதெல்லாம் மத்திய அரசு வேலையாச்சேன்னு அபி அப்பா உங்களுக்கு லெட்டர் போட்டிருப்பார் :)
இன்னும் ஒன்னே ஒன்னு. உங்க எல்லா படத்துலயும் எதாவது ஒரு காட்சியில முஸ்லிம்களுக்கு உதவுறதா ஒரு சீன் வைப்பீங்க ஆனா குஜராத் மோடி விவகாரத்துல ஏன்ய்யா ஒன்னுமே பேச மாட்டேன்றீங்க? இப்படி எல்லாத்திலயும் மவுனமா இருந்துட்டு அவங்க சரியில்ல இவங்க சரியில்ல 2011ல நாந்தான் முதல்வர்னு பினாத்திகிட்டு இருந்தா நெப்போலியன் சொன்ன மாதிரி எதாவது கல்லூரிக்கு முதல்வரா ஆனாத்தான் உண்டு. நீங்க உங்களுக்கு இருக்குறதா நம்பிட்டு இருக்குற மக்கள் செல்வாக்கு உங்க குடும்பத்தில இருந்துகூட கிடைக்காது .
இன்னும் கேள்விங்க அதிகமா இருக்கு இதப் படிக்கவே உங்களுக்கு நேரம் இருக்கான்னு தெரியல. எதாச்சும் சூட்டிங்ல பிஸியா இருப்பீங்க.
ஃபுல் மப்புடன் ...
குவாட்டர் கோவிந்தன்
நெப்போலியபுரம்.

Thursday, November 22, 2007

ஜெயலலிதா விவகாரத்துக்கு கவர்னர் ஒப்புதல்

ஒருவர் பதிவில் (அவருக்கு பாஜக பிடிக்கும் விபிசிங்கை பிடிக்காது காரணம் அவர்தான் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்திய பிரதமர். அதனால்தான் பாஜக தூண்டுதலில் மண்டல்கமிஷனை எதிர்த்து ராஜிவ் கோஸ்வாமி என்ற பார்ப்பன மாணவன் தீக்குளித்து இறந்து போனான் ).
திருக்குவளை முத்துவேல் கருணாநிதி. சுருக்கமாக "கலைஞர்".
சந்தர்பவாதி என்று சொல்லப் பட்டிருந்தது. அதாவது சந்திரசேகரை விட ( ஆனா அவரோட தலைப்புலயே விஷமம் இருந்துச்சி. சந்திரசேகர் எப்போ சந்திரசேகரர் ஆனார்னு யாராவது சொன்னால் பரவாயில்லை :) ) கலைஞர் சந்தர்ப்பவாதியாம்.

ஜெயாவிவகாரத்துக்கு வருவோம் (கவணிக்க விவாகரத்து இல்லை) நடராஜன் திமுக ஆளாய் இருந்தபோது ஆர்.எம்.வீ அவரை அடிக்கடி பந்தாடுவாராம் ஆனால் அது ஜெயாவுக்கு பிடிக்கவில்லை. காரணம் தோழியும் கணவரும் தூர தூரமாய் கிடக்க வேண்டுமே அதனால் எம்ஜிஆரிடமே சண்டை போட்டு நடராஜனை சென்னைக்கு மாற்றச் சொன்னார் ஜெயா. ஆனால் எம்ஜிஆருக்கு செயாவுடன் சசி இருப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. நடராஜனிடம் சொல்லி "உங்கள் மனைவியை ஜெயாவுடன் பேச வேண்டாம் எனச் சொல்லச் சொன்னார் நடராஜன் மறுத்துவிட்டார். சாதாரண விடியோகடை நடத்தி வந்த சசி இன்று கோடிகளுக்கு அதிபதி அதுமட்டும் அல்ல அதிமுக செயற்குழு உறுப்பினரும் கூட . எனக்குத் தெரிந்து விடியோ கடை வைத்திருந்த நண்பர் ஒரூவர் சொன்னார் "எங்கப்பாவிடியோ கேசட்டை வாடகைக்கு கொண்டு போனா ஒரு காப்பி அவங்க எடுத்துட்டு வாடகைக்கு விடுறானுங்க இந்த தொழிலையே விட்டுடப் போறேன்னு சொன்னார் ஒரு பத்து வருசத்துக்கு முன்னவே :)

எம்ஜிஆர் எப்போது சாவார் எப்போது கட்சியை தன்வசப் படுத்தலாம் என அல்லும் பகலும் அயராது "பாடுபட்ட" ஜெயா கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களை வளைத்துப் போட்டார். சந்தர்பம் பார்த்து. அதே சந்தர்பம் வந்தபோது தன்னை தலைவியாக முன்னிலைப் படுத்த தடையாக இருப்பார்களோ என திருநாவுக்கரசும் பிறரும் சவ ஊர்வலத்தில் இருந்து தன்னை தள்ளிவிட்டதாக சந்தர்பவசமாக விழுந்ததை ( அந்த விடியோ இப்போதும் காணக் கிடைக்கிறது. எம்ஜிஆரின் உடல் இருக்கும் வண்டியில் இருந்து திருநாவுக்கரசு இறக்கி விடும்போது ஜெயாவின் கால் தவறி தடுமாறி விடுகிறார் அபோதும் திருநாவுக்கரசே தாங்கிப் பிடிக்கிறார்) ஆனால் கட்சியில் ஆர்.எம்.வீ. நெடுஞ்செழியன்களுக்கு ஆதரவு அதிகரிக்காமலும் ஜானகியே கட்சித் தலைமைக்கு வந்துவிடக் கூடாது என்பதாலும் தன்னை தள்ளிவிட்டதாக நாடகமாடுகிறார்.

சட்டசபையில் கலைஞர் முதல்வர் நிதிநிலை அறிக்கையை எழுந்து நின்று வாசித்துக் கொண்டிருக்கிறார். அபோது மறுப்பு தெரிவித்த ஜெயாவுக்கு வந்ததே கோபம் நிதிநிலை அறிக்கை புத்தகத்தால் கலைஞரின் மண்டை குறிவைத்து அடித்தார் கண்ணாடி உடைந்ததோடு தப்பித்தார் கலைஞர்.
அப்போது நடந்த தள்ளு முள்ளில் தன்னை சட்ட சபையில் மானபங்கப் படுத்தியதாக "செல்வி.ஜெயா" அறிக்கை விட்டு அழுது புலம்பினார்.
மேலும் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனதாக ராஜீவிடம் புலம்பி புலிகள் ஆயுதம் கடத்த தமிழக அரசே உடந்தையாக இருப்பதாகவும் கூறி ராஜீவின் வலியுருத்தலில் கலைஞரின் அரசை "உலகப் புகழ்பெற்ற "பிரதமர் சந்திரசேகரை கலைக்க வைத்தார். "ஈழத் தமிழர்களுக்கு உதவுவதை ஜெயா எதிர்ப்பது ராஜிவ் கொலைக்கு பின்னால் மட்டுமல்ல"

ஸ்ரீபெரும்புத்தூரில் ராஜிவ் காந்தி சிறப்புறையாற்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த போது "என்ன காரணத்தாலோ" தமிழக கூட்டணித் தலைவி ஜெயா செல்லாமல் ஒதுங்கிக் கொண்டார் தற்கொலை தாக்குதலில் ராஜீவ் கொல்லப் பட கருணாநிதியே உடந்தை என ஒரு பழியைச் சுமத்தினார்.

இன்னும் திருச்சி விமான நிலையத்தில் ப. சிதம்பரத்தை தாக்கிய பெரம்பலூர் இளவரசனை பால்வளத் துறை அமைச்சராக்கினார். தந்தைக்கு எதிராய் களமிறங்கி வெற்றி சூடிய தாமரைக்கணியின் அய்ந்தாவது வரை "படித்த" இன்பத்தமிழனை விளையாட்டுத் துறை அமைச்சராக்கி "அழகு பார்த்தார்"

தன் முதலாம் ஆட்சி காலத்தில் எம் எல் ஏ என்று எதிர்கட்சிகள் இல்லாத போது கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த வழக்கில் சில ஆவணங்களில் இருக்கும் கையெழுத்து என்னுடையதே இல்லை என்றார். தனக்கு எதிராக வழக்கு தொடுக்க சுப்பிரமணியன் சாமிக்கு அனுமதி கொடுத்த அப்போதைய கவர்னர் சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்ற குற்றச் சாட்டு.

தேர்தல் ஆணையம் சில கடுமையான கருத்துக்களுடன் அரசை சுட்டிக்காட்டிய போது அப்போதைய கமிஷணர் டி.என்.சேஷனுக்கு மகளிர் அணி சார்பில் "புகழ்பெற்ற வரவேற்பு என அம்மாவின் " அற்புதங்கள் ஏராளம் .

இதுநாள் வரை தன்னை "பாப்பாத்தி" ஆகவே வெளிப்படுத்தி வந்த "செல்வி". ஜெயா இப்போது தன்னை ஒரு தமிழச்சியாகவும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். பாவம் தமிழச்சிகள் இனி பச்சைத் தமிழன் என்பது போல "பாப்பாத்தி தமிழச்சி " என்றும் சொல்லவேண்டும் போல் இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட திமுக செயலார் பூண்டி கலைச்செல்வன் கொல்லப்பட்ட தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக சொல்லும் ஜெயா அந்த கொலைக்கு காரணமே அதிமுக நகர செயலாளர் என்பதை ஏனோ மறந்து போனார் இதைத்தான் தேங்காய் திருடுவது ஒருத்தன் தெண்டம் கொடுப்பது ஒருத்தன் என சொல்லுவாங்கபோல.

ஜெயலலிதா என்னவோ சட்டத்துக்கு உட்பட்டே தான் நடப்பது போலவும் அதனால் அடிக்கடி சட்ட உதவியுடன் கலைஞர் அரசை கலைத்துவிடலாம் என்றும் கனவு காண்கிறார். ஆனால் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எந்த வழக்கிலும் இதுவரை ஆஜராகாமல் தனி நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியும் கூட வாய்தா வாங்குகிறார் செல்வி சட்டத்தை ம்மதிக்கும் பாங்கு இதுதான் "சசி ஜெமீதான வழக்கு விசாரணையுடன் சேர்த்தே ஹவாலா மோசடியும் விசாரிக்கப்படும் விவகாரத்தில் இரண்டையும் ஒன்றாக விசாரிக்க தடை கோரி ஜெயா தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.....

பாவம் அந்த நீதிபதி :)

Monday, November 19, 2007

மனுசன கடிச்சி இப்போ ஆட்டையும் கடிக்கும் காஞ்சி காமகேடி

கும்பகோணத்தில் "சோம வாஜபேயி யாகம்" என்ற யாகத்தில் சில ஆடுகளும் குதிரைகளும் உயிர்பலி கொடுக்கப் பட்டதாகவும் அவை உயிரோடு நெருப்பில் இட்டு கொலைசெய்யப் பட்டதாகவும் செய்திகள் சலங்கை கட்டி வந்தவண்ணம் உள்ளன. காஞ்சி சங்கர ராமன் கொலைவழக்கின் சூத்திரதாரி காம கேடி அந்த வழக்கில் இருந்து வெளிவரவேண்டும் என வேண்டியே கும்பகோணத்தில் இந்த கோர யாகம் நடத்தப்பட்டதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

ஆட்டைக் கடிச்சி மாட்டை கடிச்சி மனுசனை கடிக்கும் பழமொழியை தலைகீழாக்கி முதல்ல மனுசனை கடிச்சுட்டு இப்போ மாட்டையும் ஆட்டையும் குதிரையையும் கடிக்கிறார் காமகேடி சுப்புணி மாமா! சங்கர ராமன் கொலைவழக்கில் இருந்து தப்பிக்க மறுபடியும் கொலைத் தாண்டவம்.

இந்துக்கள் ஆட்டை மாட்டை உண்ணக் கூடாது என்பதும் காமகேடி சொல்வதே ஆனால் உயிர்ப்பலியாக கொடுக்கலாம் போல் தெரிகிறது யாராவது "சமீபத்தில்" இப்படி ஒரு யாகம் நடந்ததா என தெரியப்படுத்தினால் நலம்.

ஒரு பார்ப்பானைக் கொன்றாலே கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்து ஆளாகவேண்டிவரும் என மனு தர்மம் சொல்வதாக கல்வெட்டுக்கள் சொல்கின்றன :)
ஒரு பார்ப்பானையும் கொன்று அவ் வழக்கில் இருந்து வெளிவர பசுவையும் கொல்லும் சுப்புணிக்கு பாவமூட்டைகள் இன்னும் அதிகம்தானே ஆகும்?

இது கூடத் தெரியாமல் ஏன் இந்த யாகம் என்று யாராவது சொல்லலாம். உலக அமைதிக்காக வேண்டி இந்த யாகம் நடத்தப் பட்டதாக சுப்புணி அண்டு கோ தெருவாய் மலர்ந்துள்ளது ஆனால் உலகம் அமைதியாக எல்லா பார்ப்பனர்களும் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு வாயையும் இன்னொன்றையும் பொத்திக்கொண்டிருந்தாலே போதும் என்று நம் குவாட்டர் கோவிந்தன் சொல்கிறார்.

குஜராத்தில் மோடி இங்கே ஒரு கேடி என எங்கே பார்த்தாலும் ராமநாராயணன் படத்தில் வருவது போல ஒரே அதிசய மாந்திரீகவாதிகளாய் மாறிப்போகிறது இந்தியா இந்த கொடுமை போதாதென்று இன்னொரு கடைசி செய்தி,

மதுரையருகே திருநிறைச்செல்வன். செல்வராஜ், செல்வி.செல்வியை தாலிகட்டி மனையாளாக்கிக் கொண்டார் காரணம் மணப்பெண்ணின் உறவினர்கள் இருவரை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் செல்வராஜ் கொன்று விட்டாறாம் அதனால் நல்ல செயல்தானே இது என்பவர்கள் அவசரப் படாமல் கீழே படிக்கவும் அந்த செல்வி 10 வயதான ஒரு பெண் நாய். இது போலவே காமகேடியும் பசுவுக்கோ அல்லது ஆட்டுக்கோ இல்லல குதிரைக்கோ தாலிகட்டி மனைவியாக்கி அந்த யாகத் தீயில் எரிந்துபோண விலங்குகளை சந்தோசப் படுத்துவாராக !!

Saturday, November 17, 2007

ராமர் பாலத்தில் என்னதான் இருக்கு -ஒரு ஆய்வு

இந்தியாவை இலங்கையில் இருந்து பிரிக்கும் குறுகிய ஜலசந்தியில் ஒரு கப்பல் போக்குவரத்திற்கான கால்வாயை தோண்டும் திட்டம் பற்றிய சமீபத்திய அமளி நெருக்கடி-நிறைந்த பாரதீய ஜனதா கட்சி (BJP) இந்தியாவின் இரண்டாம் பெரிய அரசியல் கட்சியாக ஏன், எவ்வாறு தன் நிலைமையை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது என்பதைப் பற்றி வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது; அதே நேரத்தில் பெரும்பாலான இந்தியர்களால் நிராகரிக்கப்பட்ட, தீமை விளைவிக்கும் இந்து மேலாதிக்க கருத்தியலை, ஒரு பிற்போக்கான சமூகப் பொருளாதா செயற்திட்டத்தை எப்படி முன்வைக்கிறது என்பதும் தெரியவருகிறது.

முன்பு பலமுறை எண்ணற்ற சந்தர்ப்பங்களில் செய்தது போலவே, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (BJP) அரசாங்கத்தின் பெரும் பங்காளியான காங்கிரஸ் கட்சி இதற்கு ஏற்ப BJP யின் பிற்போக்கு மற்றும் வகுப்புவாத பிரச்சாரத்திற்கு இணங்க சமரசம் செய்து கொண்டுவிட்டது. நீதிமன்றங்களும் அவ்வாறே செய்தன. UPA அரசாங்கம் தொடர்ந்து பதவியில் நீடிக்கத்தேவையான பாராளுமன்ற வாக்குகள் ஆதரவைக் கொடுத்து பதவியில் அதைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்டுக்கள்) (CPI-M) இந்து வலதுசாரிக்கு தீய இச்சைகளை பூர்த்திசெய்வதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அதன் ஒப்புதல் முத்திரையை அளித்தது.

சேதுசமுத்திரம் (கடற்-பாலம் எனப் பொருள்படும்) திட்டம் கப்பல்கள் இலங்கைத் தீவின் தெற்கு முனையை சுற்றிக் கொண்டு போகவேண்டிய தேவையை அகற்றுவதன் மூலம் இந்தியப் பெருங்கடலின் மேற்குப்புறத்தில் இருந்து கிழக்குப் பகுதியான வங்கக் கடலுக்கு செல்லும் கப்பல்களின் பயணத் தூரத்தை குறைக்கும்.

இத்திட்டம் தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையே இருக்கும் ஆழமற்ற, குறுகலான கடல்நீர்ப் பாதையை ஆழமாக்குவதின் மூலம் ஒரு கால்வாயை தோற்றுவிக்க முற்படுகிறது. இந்தியாவின் சூயஸ் கால்வாய் என்று இத்திட்டத்தை கொண்டுவருபவர்களால் பாராட்டப்படும் சேதுசமுத்திரத் திட்டம் 2005ல் தொடங்கி 2008ல் முடிவடைய இருக்கிறது.

UPA அரசாங்கம் இது நிறைய வணிக நலன்களைக் கொடுக்கும் என்று கால்வாய்த் திட்டத்தை கொண்டுவந்தாலும், இத்திட்டத்தில் ஒரு இராணுவ நோக்கம் உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. இக்கால்வாய் இந்திய கடற்படைக்கு தன்னுடைய பிரிவுகளை ஒரு கடலோரத்தில் இருந்து மற்றொரு கடலோரத்திற்கு மிகத் திறைமையுடன் கொண்டு செல்லும் திறனைக் கொடுக்கும் என்பதோடு, எந்த எதிர்கால போட்டியாளரையும் திணற அடிக்கச்செய்யும் முனைகளாக கால்வாயை திறமையாக கட்டுப்படுத்த முடியும்

இத்திட்டம் கடுமையான குறுகிய மற்றும் நீண்ட கால சேதங்களை ஏற்படுத்தவும் கூடும் என்பதால் மிகப் பரந்த முறையில் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது இந்திய, இலங்கை கடலோரப்பகுதிகளில் வசிக்கும் வறிய மீன்பிடிக்கும் சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் இது அழிக்கும். இப்பகுதி நீர்நிலையில் இந்திய கடற்படை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளம் ஒன்றை அமைப்பதற்கான இரகசிய திட்டங்களை கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன; அது அணுசக்திக் கழிவு தற்செயலாகவோ அல்லது கசிந்தாலோ ஏற்படக்கூடிய ஆபத்தை அதிகரிக்கும். இத்திட்டம் சுனாமி புயல் தாக்குதல்கள் திறனை அதிகரிக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

கடந்த இரு மாதங்களாக மற்றும் அதன் இந்து அடிப்படைவாத கூட்டாளிகள் வெளிப்படையான சந்தர்ப்பவாத, வகுப்புவாத பிரச்சாரத்தை சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக நடத்தி வருகின்றனர். BJP தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (NDA) கூட்டணி அரசாங்கமே இத்திட்டத்தை 2002ல் ஒப்புக் கொண்டிருந்தாலும், இப்பொழுது ஆழமாக்கும் பணி "ராம் சேது" (கடவுள் இராமரின் பாலம்) - இந்தியாவின் தென் கடலோரப் பகுதியில் இருந்து இலங்கையின் வடபகுதி வரை செல்லும் இயற்கை சங்கிலியான சிறு மணல் திட்டுக்களின் மீது ஒரு இந்து சமயப் பெயர் சூட்டப்பட்டுள்ளது-, அழிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தைக் கூறி, கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

"ராம் சேது" மீது நம்பிக்கை BJP என்பது, கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய குழந்தைக்கும் சடங்கு போல் கற்பிக்கப்படும் பழம்பெரும் இந்திய காப்பியங்கள் இரண்டில் ஒன்றான இராமாயணத்தில் இருந்து வருவதாகும்.

இந்தக் காப்பியம் பற்றி கணக்கிலடங்கா மொழிபெயர்ப்புக்கள் இருந்தாலும், இந்து அடிப்படைவாதிகளின் ராம் சேது பற்றிய கூற்றுக்கள் 16ம் நூற்றாண்டு வட இந்தியக் கவி துளசிதாஸ் எழுதிய இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

அக்காப்பியத்தின்படி, இராமர் (இந்திப் பெயர் ராம்), மூன்று முக்கிய இந்துக் கடவுளர்களில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரம் என்றும் இராமாயணக் கதை புவியில் அவருடைய செயல்களை சித்தரித்துக் காட்டுவது என்றும் நம்பப்படுகிறது.

இராமர் ஒரு வட இந்திய அரசின் ராஜா ஆவார்; அதன் தலைநகர் அயோத்தி நகரம் ஆகும்; இது இப்பொழுது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. காப்பியத்தின்படி, இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்திக் கொண்டு இலங்கை சென்ற பின்னர், இராமர் தன்னுடைய விரோதியான, தென்னக நாட்டு அரசனான இராவணனை, இலங்கைக்கு சென்று பிடிக்க முற்படுகிறார். இராமருடைய தொடர் முயற்சிக்கு அவருடைய குரங்கு-பக்தரான ஹனுமான் உதவி செய்கிறார்; இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீரால் பிரிக்கப்பட்டுள்ள பகுதியில் ஒரு பாலத்தை கட்டுவதற்கு ஹனுமான் பெரிய குரங்குப் படை ஒன்றை திரட்டுகிறார்.

BJP உடன் முன்ன்னியில் நின்று இந்து வலதுசாரி பாக் ஜலசந்தியில் ஆழமற்ற பகுதிகளில் காணக்கூடிய சங்கிலி போன்ற மணல்திட்டுக்களை இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய பாலம் என்று அபத்தமான கூற்றை முன்வைத்து இப்பொழுது சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக்கொண்டிருக்கிறது.

BJPதலைமை வகித்த கூட்டணி அரசாங்கம் 2002ல் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தபோதே, கால்வாயின் அமைப்பு, போக்கு ஆகியவை "ராம் சேதுவை" பிளந்து செல்லும் என்பதை நன்கு அறிந்திருந்தது என்பதை அறியும்போது, BJP மற்றும் அதன் கூட்டாளிகளின் பாசாங்குத்தனம் மற்றும் சந்தர்ப்பவாதம் இகழ்ச்சிக்கு உரியதாகிறது. ஆயினும்கூட இப்பொழுது ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு இந்த "இந்து மரபியத்தை" காக்க முன்வந்துள்ள அடிப்படைவாத அமைப்புக்களில் ஒன்றுகூட அப்பொழுது எதிர்ப்புக் குரலை எழுப்பவில்லை.

தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட BJP நண்பரான சுப்பிரமணியன் ஸ்வாமி, இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்த மனு ஒன்றிற்கு விடையளிக்கும் வகையில், நீதிமன்றம் இந்திய அரசாங்கத்திற்கும் சேதுசமுத்திர நிறுவனத்திற்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆழப்படுத்தும் வேலையை "ராம் சேதுவை" பாதிப்பு இல்லாமல் நடத்துமாறு இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. மேலும் இந்திய அரசாங்கம் இரு வார காலத்தில் முழுத் தகவல்களையும் கொடுக்குமாறு உத்தரவிட்டது.

செப்டம்பர் 12ம் தேதி இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இதை எதிர்கொள்ளும் வகையில் ஒரு பிரமாணத்தைக் கொடுத்தது. , "மனுதாரர்கள் [சுப்பிரமணியன் ஸ்வாமி, மற்றவர்கள்] நியாயம் கேட்கும்போது [ராம் சேதுவை சேதப்படுத்தக்கூடாது என்னும்போது] முக்கியமாக வால்மீகி இராமாயணம், துளசிதாசரின் ராமசரிதமானஸ் மற்றும் புராணப் பொருளுரைகளை நம்பியுள்ளனர் என்றும், இவை பண்டைய இந்திய இலக்கியத்தில் முக்கியமான பகுதி என்றாலும், இவை கதாபாத்திரங்கள் அல்லது காப்பியங்களில் விளக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் மறுப்பிற்கு இடமின்று இருந்தன, நடந்தவை என்று வரலாற்றளவில் சான்றுகள் இருப்பதாகக் கூறமுடியாது" என்று அதில் கூறப்பட்டது.

கிஷிமி மேலும் குறிப்பிட்டது: "இடைக்கால, சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியா பற்றிய தொடர்ச்சியான வரைபடங்களை அடிப்படையாக மனுதாரர்கள் முன்வைத்துள்ளனர்; இவை ஆடம் பாலம் என்று அறியப்பட்டுள்ள ஒரு அமைப்பு பற்றி குறிப்பிடுகின்றன என்பது ஒப்புக்கொள்ளத்தக்க வகையில் உள்ளது. ஆனால் பெயரளவில் ஒரு குறிப்பு இருப்பது மட்டுமே இந்த அமைப்பு உண்மையில் மனிதன் கட்டிய அமைப்பு என்பதாக உண்மையை உறுதியாக நிலைநிறுத்த முடியாது. எலும்புகள் போன்றவற்றிலோ, வேறுபல பழங்கால வடிவங்களிலோ மனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், தொல்லியல் ஆய்வு ரீதியாய் ஒரு வரலாற்று உண்மையின் நிலைப்பாடு, தன்மை இவற்றை நிரூபிக்க முக்கியமானது ஆகும். ஆடம் பாலம் என்னுமிடத்தில் உள்ள அமைப்பில் அத்தகைய மனித விட்டுச்சென்ற சுவடுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை."

இதற்கு மறுநாள், இந்துக்களுக்காக பாதுகாவல் அமைப்பாக தன்னையே நியமித்துக் கொண்ட BJP, கிஷிமி யின் சாதாரண கருத்தான இராமாயணம் என்பது ஒரு சமய-இலக்கியம், வரலாற்று இலக்கியம் இல்லை என்பதை எடுத்துக் கொண்டு, UPAஅரசாங்கத்திற்கு எதிரான கடுமையான வகுப்புவாத பிரச்சாரத்தை தொடக்கியது.

2004ல் அதிகாரத்தில் இருந்து வீழ்ந்த பின்னர், BJP கிட்டத்தட்ட தொடர்ந்த நெருக்கடியில்தான் இருந்து வருகிறது. பெருவணிகத்தின் முக்கியமான பிரிவுகளையும் அது விரோதித்து கொண்டுவிட்டது; அதற்குக் காரணம் விசுவாசமான எதிர்க்கட்சியாக செயல்படாமல் அடிக்கடி பாராளுமன்ற செயல்பாடுகளை நடத்த விடாமல் இது செய்ததுடன், அரசாங்கத்தை "இந்து-எதிர்ப்பு" அரசாங்கம் என்று காட்டும் முயற்சியிலும் பலமுறை ஈடுபட்டதுதான்; உதாரணமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் இத்தாலிய-கத்தோலிக்க மூலத்தை சுட்டிக் காட்டியது எடுபடாமற் போயிற்று.

இருந்தபோதிலும்கூட ராம் சேதுப் பிரச்சினை குறித்து BJP போராட்டத்தை தொடக்கியவுடனேயே UPA அரசாங்கமும் அதன் காங்கிரஸ் தலைமையும் முழுமையாக பின்வாங்கின.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கொடுத்த உத்தரவின்பேரில், மத்திய சட்ட மந்திரி எச்.ஆர். பாரத்வாஜ் அவசர அவசரமாக ஒரு செய்தியாளர் கூட்டத்தை கூட்டி, கிஷிமி கொடுத்த பிரமாணத்தை நிராகரித்து, "இராமர் வாழ்ந்தது பற்றி சந்தேகிக்க முடியாது. இமயமலை என்பது இமயமலை போல், கங்கை என்பது கங்கை போல், இராமர் இராமரே. இது நம்பிக்கை பற்றியது. நம்பிக்கையின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள கருத்திற்கு எந்த சான்றும் தேவையில்லை" என்று அறிவித்தார்.

தொல்லியல்துறை ஐ மேற்பார்வையிடும் பொறுப்பு கொண்ட, மத்திய பண்பாட்டுத் துறை மந்திரியான அம்பிகா சோனி, இராஜிநாமா செய்ய முன்வந்தார். செய்தியாளர்களுக்கு தெரிவித்த கருத்தில் அவர் கூறினார்: "என்னுடைய தலைவர்கள் (பிரதம மந்திரி மன்மோகன் சிங், சோனியா காந்தி) என்னைக் கேட்டுக் கொண்டால் என்னுடைய பதவியை ஒரு நிமிடத்தில் துறந்துவிடுவேன்."

அம்பிகா சோனி, சோனியா காந்தியை சந்தித்தபின் தன்னுடைய வேலையை தக்க வைத்துக் கொண்டாலும், சடுதியில் தொல்லியல் துறையை ஐ ஒரு பலி ஆடாக ஆக்க முற்பட்டார். இரண்டு உயர்மட்ட அதிகாரிகளை வேலையில் இருந்து நீக்கினார்; BJP யின் பிற்போக்கு, மூடப்பழமை இருள் மற்றும் வகுப்புவாத பிரச்சாரத்திற்கு எதிராக அவர்கள் செய்ததெல்லாம் அறிவியல் சார்ந்த கருத்து ஒன்றை அளித்ததுதான்.

ஸ்ராலினிச (cpi-M) இப்படி இந்த வகுப்புவாதக் கூறுபாடுகளுக்கு தீங்கு செய்யத் துணைபோவதற்கு களிப்புடன் ஒப்புதல் முத்திரை இட்டது. தங்கள் அறிக்கையில் அக்கட்சியினர் கூறியதாவது: "சேதுசமுத்திரம் வழக்கில் தலைமை நீதிமன்றத்தில் கிஷிமி அளித்த பிரமாணத்தில், மனுவிற்கு புறம்பாக கருதப்படும் சில கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளுவது என்ற தக்க, உரிய முடிவை இந்திய அரசாங்கம் எடுத்துள்ளது."

இதைத் தொடர்ந்து சிறிமி(வி) ஒரு வளைந்த நாக்குடன் கூறியது: "அப்படி இருந்தாலும், ஆடம் பாலம் (அல்லது ராம் சேது) பாக் ஜலசந்தியில், மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்பு என ஒன்று இருந்ததற்கான அறிவியல் பூர்வ சான்று இல்லை என்பது கட்டாயம் வலியுறுத்தப்பட வேண்டும்."

இராமாயணத்தில் இருந்துதான் இது மனிதனால் கட்டப்பட்ட அமைப்பு (பாலம்) என்று கூறப்படுவதற்கு வழக்கின் ஒரே "சான்று" இருக்கும்போது, தாங்கள் ஏன் பாத்திரங்கள் அல்லது காப்பியத்தில் நடந்தது போல் நிகழ்வுகள் உண்மையாய் இருந்தவற்றின் வரலாற்றுத் தன்மை வழக்கிற்கு "புறம்பானது" என்று தாங்கள் ஏன் கருதினர் என்பதை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் விளக்கவில்லை.

காங்கிரஸ் மற்றும் இடது எதிர்ப்பாளர்கள் அரசியலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தது பற்றி BJP முழு ஆதாயத்தை பெற்றுக் கொண்டது. இந்திய பாராளுமன்றத்தின் மக்கள் பிரிவாகிய லோக் சபாவில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எல்.கே. அத்வானி, ராமருடைய பிறப்பிடம் என்ற அடிப்படையில் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்துத் தள்ளவேண்டும் என்ற பிரச்சாரத்தின் முதன்மை ஏற்பாட்டாளர், இப்பொழுது கிஷிமி க்கும் அரசாங்கத்திற்கும் எதிராக கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், இந்துக்கள்மீது "இது அவமதிப்பை அள்ளி வீசியது" என்றார்.

BJP யின் தலைவர் ராஜ்நாத் சிங் இதேபோல் முழக்கமிட்டார்: "இந்துக்களின் சமய உணர்வுகளை புண்படுத்தியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பை அரசாங்கம் கோரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது."
BJP மற்றும் அதன் வகுப்புவாத நண்பர்கள் "இந்து உணர்வு", "இந்து மரபியம்" பற்றி அபசுரமாக ஒலி எழுப்பியிருக்கையில், கால்வாய் திட்டம் எப்படி இந்தியா, மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் வாழும் மீன்பிடிப்பவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வில் பேரழிவுத் தாக்கம் ஏற்படுத்தக்கூடியது பற்றியோ, கடுமையான சுற்றுச்சூழல் சேதத்தைப் பற்றியோ கூறவில்லை.BJP காங்கிரஸ் கட்சியும் அது பற்றி ஏதும் கூறவில்லை. BJP வகுப்புவாதிகளை சமரசப்படுத்த விரைவில் அரசாங்கம் முயன்றாலும், பல உள்ளூர் தளத்தை கொண்ட மற்றும் சுற்றுச் சூழல் அமைப்புக்கள் இத்திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று பல முறையும் கூறியதை முழு அசட்டையுடனும், இகழ்வுடனும்தான் எதிர்கொண்டனர்.

மதசார்பற்ற தன்மையை நிலைநிறுத்துவதாக கூறிக்கொண்டாலும், காங்கிரஸ் கட்சி பல தசாப்தங்களாக இந்து வலதுடன் இணங்கி நின்றிருக்கிறது, சில சமயம் உடந்தையாக செயல்பட்டதற்கும் நீண்ட வரலாறு உண்டு. 2004 மே மாதம் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான UPAகி பலமுறையும் அரசியல் அமைப்பு அதிகாரங்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயத்திற்காக மாநிலங்களை "ஜனாதிபதி ஆட்சியின் கீழ்" கொண்டுவந்துள்ளது; ஆனால் 2002 ல் முஸ்லிம் எதிர்ப்புப் படுகொலைகளுக்கு தலைமை தாங்கி, இப்பொழுதும் அதை நடத்தியவர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் BJP அரசாங்கத்திற்கு எதிராக குஜராத்தில் அது எதையும் செய்யவில்லை. உண்மையில், BJP பிரிவினர் சிலரைத் திருப்திப்படுத்தும் வகையில் ஆதரவைக் கொண்டு காங்கிரஸ் வரவிருக்கும் குஜராத் மாநிலத் தேர்தல்களுக்கு தயாராகிறது.

1991ல் காங்கிரஸ் தொடக்கிய புதிய தாராள சீர்திருத்தங்கள் மீதான மக்கள் சீற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு 1998ல் தேசிய அளவில் BJP முதல்முறையாக அதிகாரத்தைக் கைப்பற்றியது; மேலும் 1996-1998ல் இந்தியாவை ஆண்ட ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு ஸ்ராலினிஸ்டுகள் தொடர்ந்து ஆதரவைக் கொடுத்திருந்தனர். BJP தலைமையிலான ழிஞிகி அரசாங்கம் இதன்பின்னர் இரக்கமற்ற முறையில் வணிகச் சார்புடைய, தொழிலாள வர்க்க-எதிர்ப்பு நிறைந்த பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தியது; இதன் விளைவாக 2004 பொதுத் தேர்தலில் அவமானகரமான தோல்வியை சந்தித்தது.

அப்பொழுதில் இருந்து அக்கட்சி தன்னுடைய முந்தைய இறுமாப்பு நடையை இழந்து, உட்பூசல்கள் குற்றத்தை பிறர்மீது போடல் ஆகியவற்றால் வீணழிந்துவருகிறது. ஆயினும் கூட காங்கிரஸின் சமரசத்தாலும் மற்றும் அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ செயற்பட்டியலுக்கும் எதிரான தொழிலாள வர்க்கம் மற்றும் உழைப்போரின் எதிர்ப்பை ஸ்ராலினிஸ்டுகள் ஆபத்து இல்லாமல் செய்துவிடுவதாலும் வழங்கப்படும் உயிர் பிழைத்தல் மூலம் தள்ளாடி நடக்கிறது


நன்றி wsws.org

Tuesday, November 13, 2007

பார்ப்பானாக குரங்கு வந்தாலும்...

இராமாயணத்தில் ஒரு காட்சி. அயோத்தியாபுரி அரசன் ஆயிரம் ஆசை நாயகிகளின் ஆசான். தசரத மகா சக்ரவர்த்தி புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, புரோகிதன் மூலம் பெற்றெடுத்த இராமச்சந்திர மூர்த்தியின் எதிரே ‘குரங்கு வம்சத்தில்’ பிறந்த அனுமான் ‘பிராமண’ உருவத்தில் வருகிறான்.

அந்தப் ‘பிராமண’ உருவத்தைக் கண்டதும், ‘இராம பிரபு’ அப்படியே சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து வணங்குகிறான்.

எதிர்பாராது நடந்துவிட்ட இந்த நிகழ்ச்சி கண்டு அனுமான் துடிக்கிறான்.

“இராம பிரபு... என்ன காரியம் செய்து விட்டீர்கள்? நான் உண்மையான பிராமணன் அல்ல. நானோ வானர வம்சத்தில் பிறந்தவன். மரம், செடி, கொடிகளில் தாவிப் பிழைப்பவன், ‘பிராமண’ உருவெடுத்து வந்தேன். அவ்வளவுதான். என கால்களில் கடவுள் அவதாரமாகிய தாங்கள் வீழ்ந்து நமஷ்கரிப்பது நியாயமா? நீதியா? தருமமா? என்று பதறுகிறான்.
அப்பொழுது இராமன் கூறுகிறான்.

“அனும! நீ அறியாமையிலே பேதலிக்கிறாய். பிராமண உருவத்தில் வருவது எதுவாக இருந்தாலும், அது குரங்காய் இருந்தாலும் சரியே. நமஷ்கரித்து வணங்குவதே சரியான தருமமாகும். பிராமணனே சகலத்திறகும் மேலானவன்” என்று பதில் கூறுகிறான்.
இந்தக் காட்சியைப் பக்தி ரசம் கொட்ட தீட்சதர்களும் சாஸ்திரிகளும் பிரசாரம் செய்கிறார்கள் என்றால் காரணம் புரிகிறதா?

‘இராம பிரானே’ ‘பிராமணர்’களைத் தெய்வம் என்று கூறி, தொழுது இருக்கிறான் என்ற எண்ணத்தை நம்மவர்கள் நெஞ்சத்திலே நிலைபெறச் செய்து, நாம் என்றும் பார்ப்பன அடி தொழும் ஆழ்வார்களாக இருக்க வேண்டும் என்ற நப்பாசையால் அல்லவா?

இராமாயணம் போன்ற ‘இதிகாசங்கள்’ எழுதப்பட்டதும், அதில் இதுபோன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டதும், அந்த நிலையை என்றென்றைக்கும் நிலை நிறுத்தும் நோக்கத்தோடல்லவா?

இதுவரை உணராவிட்டாலும், ஏமாளித் தமிழர்கள் இனியேனும் உணர்வார்களாக!

Wednesday, November 07, 2007

வாஸந்தி அம்மா எடுக்கும் வேத வாந்தி !

இந்தம்மா தானும் பத்திரிக்கையில் பணிபுரிந்ததை அவ்வப்போது சொல்லும், ஆனால் என்ன அதில் செஞ்சிச்சுன்னு யாருக்கும் தெரியாது, மூத்தப் பத்திரிக்கையாளராச்சேன்னு எதாவது பத்திரிக்கை காரங்க இந்த அம்மாகிட்ட பேஷினா போதும், 'பேட்டியா போட்டுகிறேளா' னு அவர்களிடம் கெஞ்சாத கொறையாக அம்மாவின் பத்திரிக்கை சேவை நடந்து வருகிறது.

செத்த பொணத்துக்கு கடைசியாக சுடுகாட்டில் சடங்கு செய்து முடிப்பாங்க, அது போல் இராமர் பிரச்சனையை எல்லோரும் பேசி முடிந்த பிறகு இந்த அம்மா பேஷ வந்திருக்கிறது. வந்ததுதான் வந்தது எதாவது அறிவு பூர்வமாக சொல்லி இருக்கான்னு பார்த்தால் அதுவும் இல்லை.
கலைஞரை பார்த்தால் பார்பனருக்கு முதுகில் அரிப்பு எடுத்து பூணூலால் தேய்துக் கொள்வதைப் போல் இந்த அம்மா தாம் ஒரு மடிசார் மாமியாக இந்த பிரச்சனையை அனுகி இருக்கிறது. பெண் உரிமை பெண்ணியம் பேசுபவர் எவராக இருந்தாலும் இராமனின் கதையைக் கேட்டால் சொல்லுபவனை செருப்பால் அடிக்காமல் இருக்க மாட்டார்கள். ஆணாதிக்க வாதியான இராமனை முற்போக்கு சிந்தனை உள்ள எந்த பெண்ணும் சகித்துக் கொள்ள மாட்டார். வாஸந்தி அம்மா மடிசார் அம்மாவாக இருப்பதால் தான் பெண் என்பதைவிட பாப்பாத்தி என்பதாகவே நினைத்து இராமர் பால நம்பிக்கை புனித சாயம் பூசி தீராநதியில் கரையேற்ற முயற்சிக்கிறார்.
பிஜேபி அரசாங்கத்தால் இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த திட்டத்தை பற்றி தெரிந்தும் இந்த அம்மா எழுதிய கட்டுரையில் வாஜ்பாய் பெயரையோ, அது தவறு என்று சொல்வது போல் எதையும் காணும், வழக்கமான பார்பனீய பார்வையில் முழுக்க முழுக்க கலைஞரை குறை சொல்லி இந்த அம்மா கட்டுரையை எழுதி இருக்கிறது.

இராமன் காவியத் தலைவனாம் ? வாஸந்தி அம்மா... இராமன் காவியத் தலைவன் இல்லை காலி காவிகள் கூட்டத்தின் தலைவன். இராமன் கதை புனிதம் என்றும், இராமர் பாலம் இருந்தது என்றும் பார்பனப் புளுகை பெரியார் பூமியில் புளுகாதே. உம் போன்ற பெண்களுக்கெல்லாம் பெரியார் இல்லை என்றால் பேச்சே வந்திருக்காது, ஆத்துக்காரருக்கு ஆதரவாக மடப்பள்ளியில் புளியோதரை பட்டை அடிக்க வேண்டி இருந்திருக்கும்.

Monday, November 05, 2007

எவன் செத்தா என்னா இந்து இல்லையே !

குஜராத்தில் நடந்த இன ஒழிப்புக்கு நிகரான கோத்ரா சம்பவத்துக்குப் பிந்தய படுகொலை, கலவரங்கள் பற்றிய தெகல்காவின் உளவுச் செய்திகள் இந்தியாவெங்கும் அதிர்வலைகளை துவக்கிய போதும் அது ஏனோ தமிழக அரசியலில் கள்ள மவுனம் சாதிக்கிறது. அத்வானி என்னும் இந்து வெறியனின் தலைமையின் கீழ் இயங்கும் பார"தீய" ஜனதா கட்சி யின் அதிகார பூர்வ ஊழியர்கள் தாங்களே இந்த கொலைகளை செய்ததாகவும் "உங்களுக்கு மூன்றுநாள் கால அவகாசம் தருகிறேன் அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் " என்று சொன்னதாகவும் ஒருத்தன் "கற்பவதியான முஸ்லிம் பெண்ணின் வயிற்றை அறுத்து அவளையும் கருவையும் கொன்றதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததாகவும்" தன் கொலைவாய் மலற்ந்திருக்கிறான்.

ராமர் பாலம் என்றதும் தன் குட்டி மீசை துடிக்க கலைஞர் மேல் காழ்ப்பை வெளிப்படுத்தும் பித்துவானி இந்த விவகாரம் குறித்து வாயில் கொழுக்கட்டையோ இல்லை வேறு என்னத்தையோ வைத்திருப்பது போல மூடிக்கிடப்பது ஏன்? ஒரு மறுப்புக்கூட இல்லாமல் ?

ராமன் எந்த காலேஜில் படித்தான் எனக் கேட்டதும் தன் "தெரு"வாய் மலர்ந்த எதிர்கால இந்தியாவின் பிரதமர் ஜெயா இந்த விவகாரத்தில் தன் பார்ப்பன இந்துப் புனிதம் கெட்டுவிடும் என்றோ என்னவோ ஒரு மண்ணும் சொல்லாமல் மவுணம் சாதிக்கிறார்.

இல்லாத ராமன் பற்றி என்னவர்கள் பேசினால் கனடாவில் இருந்து கொண்டு கண்டனம் தெரிவிக்கும் தன்னம்பிக்கை தம்பி விஜகாந்துக்கு இந்த விவகாரம் பற்றி கேட்டு வாய்திறக்கச் சொன்னாலோ அரசாங்கம் பட வேலைகளில் அரிதாரம் பூசுவதே என் தொழில் என்கிற மாதிரி எகிரி எட்டே போகிறார். அட ஒரு கண்டனம் வேண்டாம் வழக்கம் போல குஜராத்தில் அடுத்த 2011ல் எங்கள் ஆட்சிதான் பாஜக காங்கிரஸுக்கு ஒரு மாற்று ஜட்டி நாந்தான் என்றாவது ஒரு புள்ளிவிவரப் போர் தொடுக்கலாம்.

இன்னும் சரக்கு குமார், என நீளும் லிஸ்டில்

தமிழ்க்குடிதாங்கி அய்யா ஏனோ இன்னும் தன் கண்டனத்தை, ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை , திருமாவோ அன்புத் தோழி ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற கவலையில் அடுத்த ஜோடியாக மீனாவை நடிக்க வைக்க முயல்கிறார் போலும். கருணாநிதிக்கு வயதாகிவிட்டது இன்னும் அதனால் அவர் தனது முதல்வர் பதவியை துறக்க வேண்டும் எனச்சொன்ன ஞானியோ இந்த விவகாரம் பற்றி வாய் திறப்பதென்றான் ஒன்னுமே எனக்கு தெரியாது அத்வானியா அது யாருன்னே தெரியாது என தண்ணீருக்குள் வாயு பிரிக்கிறார். சோ ராமசாமிக்கு வயதாகிப் போனதாலோ என்னமோ இப்போதெல்லாம் தன் பேட்டிகள் தாறுமாறாக கிழிக்கப் படுவதாலோ மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்ன தொடர்பு என ஒரு நாட்டாமையை கூப்பிட்டு
தீர்ப்பு சொல்லச் சொல்வதாக காற்று வாக்கில் செய்தி.

வைகோவுக்கு பொள்ளாச்சியை கட்டி இழுப்பதே பெரிய வேலை. சோனியாவும் மன்மோகனும் எங்கெல்லாம், வாய் திறக்கனுமோ அங்கெல்லாம் மவுனம் சாதித்தே ஓட்டு அறுவடை நடத்த கூட்டுத் திட்டம் போடுகின்றனர்.

மூச்சை வேகமாக விட்டால் கூட முக்கியதாக கூறி கேஸ் போடும் சுப்பிரமணியன் சாமி சேது சமுத்திரத்தை கவிழ்க்கும் வேலையில் ஆழ்ந்து கிடப்பதால் இது பற்றி பேசவே நேரம் இல்லை.

இவ்வளவு ஏன் குஜராத் சம்பவம் பற்றி பகுத்தறிவுப் பகலவன் பள்ளியிலே படித்த கலைஞர் ?

ம்ஹீம் என்னத்த சொல்ல செத்தது முஸ்லீகள் தானே நமக்கு என்னான்னு என்னா "இந்துசாதி" தலைவர்களும் முடிவு பன்னிட்டாங்க போல இருக்கு -

Sunday, November 04, 2007

ஜெவுக்கு நறுக்குன்னு நாலு யோசனைகள் !!

விடுதலைப் புலிகளின் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்க்கு முதல்வர் கலைஞர் இறங்கல் கவிதை எழுதியதால் அவர் பதவிவிலக வேண்டும் என வீன் முழக்கமிடும் ஜெயாம்மாவுக்கு எனது சில யோசனைகள்

1. இந்த படுகொலைக்கு இறங்கல் தெரிவித்த பிபிஸி இனி இந்தியாவில் ஒளிபரப்பை தடைசெய்ய வேண்டும் என ஒரு போராட்டம் நடத்தினால் ஒலகம் பூரா ஒங்க பேரு பரவி ஒரு பரபரப்பை உண்டாக்காது?

2. கலைஞர் கருணாநிதி கார்க்கியோட தாய் நாவலை காவியமாக்கி அதை இப்போ சினிமாவாவும் எடுக்கிறாங்க . ஆனா இது கார்க்கிக்கு தெரியுமா ? அவரோட அனுமதி இல்லாம அவர் கதைய திருடின மைனாரிட்டி கருணாநிதிக்கு எதிரா ரஷ்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கனும்னு மாஸ்கோவுல போய் ஒரு பேட்டி கொடுத்தா சும்மா பிச்சிகிட்டு போகாது?

3. என் வீட்டில் நுழைந்த தண்டபானி கலைஞர் சொன்னபடி தமிழ்ச்செல்வன்
அனுப்பிய விடுதலைப்புலி அவர் மாட்டிக்கொண்டதும் தமிழ்ச்செல்வனைகாட்டிக்கொடுத்து அதன் மூலம் தான் மாட்டிக்கொள்வோமோ என கயவன் கருணாநிதிதான் தமிழ்ச்செல்வனை கொன்றது என ஒரு குண்டை போட்டால் இலங்கை முதல் இந்தியா வரை ஒரு ஆழிப்பேரலை ஏற்பட்டு அப்படியே இந்த அரசும் கவிழ்ந்து ஆட்சிக் கட்டிலில் புரளலாமே அம்மா?
4. எல்லாத்தையும் விட புலிகளுக்கு ஆதரவா தமிழ்மணம் செயல்ப்பட்டு தனக்கு அடிக்கடி குட்டு வைக்கும் பாசிச வலைப்பதிவுன்னு சொல்லி அதையே தடை பன்னிட்டா ஒங்க பேரும் புகழும் ஒரே நேரத்தில பரவிடாதா ஒலகம் முழுக்க?
5. ஆமா பக்கத்துலயே ஒரு பல்லு புடுங்குன புலி(அதான் உங்க அண்ணன் வைகோ) யை வச்சிருக்கீங்களே ஒங்களுக்கு பயமா இல்ல?

Friday, November 02, 2007

'தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. -தமிழ்ச்செல்வனின் இறுதி உரை


'தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம். உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தில் நாங்கள் வென்று எம்மை தற்காத்துக்கொள்ள முடியாவிட்டால் இந்த பூமிப்பந்திலே வாழமுடியாது. குறிப்பாக எங்கள் தாயகத்தை நாங்கள் இழந்து அழிந்துவிடுவோம்' என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் 'கணிநுட்பம்' மாத மலர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூலை வெளியிட்டுவைத்த பின்னர் சிறப்புரையாற்றுகையிலேயே தமிழ்ச்செல்வன் இவ்வாறு தெரிவித்தார்.

'இந்த உலகப்பந்தில் வாழவேண்டுமாக இருந்தால் உலகப்பந்தில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் உலகத்தின் அசைவியக்கத்தோடு நாங்களும் எங்களை உட்புகுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறுதான் இன்று தொழில்நுட்பத்தை பார்க்கவேண்டும். அதிலும் குறிப்பாக கணினி யுகம் என்பது இன்று எல்லாவற்றுக்குள்ளும் உட்புகுந்துள்ளதால் கணினி தொடர்பான அறிவை நாங்கள் எங்களுக்குள் ஆழமாக கற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.' எனவும் அவர் தனது சிறப்புரையில் தெரிவித்துள்ளார்.

'கணிநுட்பம்' மாத மலர் நூல் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கணிநுட்பக்கூட்டு நிறுவனமும்இ ரி.ஆர் ரெக் நிறுவனமும் இணைந்து இந்த இதழை வெளியிட்டன.

பொதுச்சுடரை தமிழீழ மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் கண்ணன் ஏற்றினார். தமிழீழ தேசியக்கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றினார்.

மாவீரர் பொதுக்கல்லறைக்கு ஈகச்சுடரை அன்னை இல்லம் பணிப்பாளர் அருட்திரு எட்மண்ட் றெஜினோல்ட் ஏற்றினார். தொடர்ந்து கருத்துரையை விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார். வெளியீட்டுரையை இதழாசிரியர் லலிதாமதி நிகழ்த்தினார். முதல் படியை சு.ப.தமிழ்ச்செல்வன் வெளியிட்டு வைக்கஇ தமிழீழ கல்விக்கழக துணைப்பொறுப்பாளர் அருள் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்.

நூலின் ஆய்வுரையை விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பிரிவுப்பொறுப்பாளர் யோ.செ.யோகி நிகழ்த்தினார்.

சு.ப.தமிழ்ச்செல்வன் இங்கு உரையாற்றுகையில் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

'அறிவியல் வளர்ச்சியுடன் சேர்ந்துகொண்டு அசைந்து போக வேண்டிய தேவைக்குள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் அதனைச் சாத்தியமாக்கியிருக்கின்றார். எங்களுடைய தேசத்தில் புதிய தலைமுறை அறிவியல்துறையில் தொழில்நுட்பத்துறையில் மேம்பட்ட சமூகமாக வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்ற தமிழீழத் தேசியாத்தலைவர் அவர்களின் எண்ணத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் வடிவம் கொடுக்கும் வகையில் கணிநுட்பப்பிரிவு எழுத்துள்ளது. அதன் ஒரு வெளிப்பாடாக எமது தாய்மொழியில் கணிநுட்பம் தொடர்பான ஒர் அறிவியல் சஞ்சிகையை அவர்கள் தொடக்கியுள்ளனர். இதனை மிகவும் மகிழ்ச்சிக்குரிய நம்பிக்கை தரும் முயற்சியாக நாங்கள் பார்க்கின்றோம்.

மனிதனின் அசைவியக்கத்தின் ஓர் உறுப்பாக இன்று கணினி மாறிவிட்டது கணினி யுகத்திற்குள் நாங்கள் புகுந்து கொள்ளாவிட்டால் இந்த உலகப்பந்தில் எங்களை நிலைப்படுத்திக் கொள்ளமுடியாத ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டுவிடுவோம். அடுத்தது இந்த உலகப்பந்தில் வாழவேண்டுமாக இருந்தால் உலகப்பந்தில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் உலகத்தின் அசைவியக்கத்தோடு நாங்களும் எங்களை உட்புகுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறுதான் இன்று தொழில்நுட்பத்தை பார்க்கவேண்டும். அதிலும் குறிப்பாக கணினி யுகம் என்பது இன்று எல்லாவற்றுக்குள்ளும் உட்புகுந்துள்ளதால் கணினி தொடர்பான அறிவை நாங்கள் எங்களுக்குள் ஆழமாக கற்றுக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

போர்ச் சூழலுக்குள் அது சாத்தியமாகுமா என்பது கேள்வி. போர் திணிக்கப்படும் போது எங்களுக்கு எல்லாமே தடுக்கப்படும்இ தடைசெய்யப்டும். அதற்கான வாய்புகள் மறுக்கப்படும். ஆகவே இந்தக்கட்டத்தில் நாம் நின்று கொண்டு உலகப்பந்திலே அறிவியல் வளர்ச்சியுடன் சேர்ந்துகொண்டு அசைந்து போக வேண்டிய தேவைக்குள் நாங்கள் இருக்கின்றோம். அது சாத்தியமாகுமா என்பதுதான் கேள்வி இதனையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சாத்தியமாக்கியிருக்கின்றார்.

எல்லாருக்கும் அதுதான் அதிசயம். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது உலகில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களிற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. எல்லாவற்றையும் அதிசயமாக பார்க்கிறார்கள். அதற்கு காரணம் தேசியத் தலைவர் அவர்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் வழிநடத்தல்களும்தான். இன்று எதிரி எல்லாவிதமான தொழில்நுட்பங்களையும் கொண்டு வந்து எங்களின் தேசத்தை அழிப்பதற்கு தமிழினத்தின் விடுதலைப் போரை இல்லாமல் செய்வதற்கு முயன்று கொண்டிருக்கின்றான். அதற்குள் எதிர்நீச்சல் போட்டு அதை எதிர்கொண்டு அதை முறியடித்து எங்களுடைய விடுதலைப் போராட்டம் முன்னகர்த்தப்படுகின்றது என்றால் எமது தலைவர் அவர்களின் சிந்தனைதான்.

எதிரியிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்டு மலரப்போகும் எங்களுடைய தமிழீழம் இந்தஉலகப்பந்தில் உயர்ந்து நிற்கும் என்ற உன்னதமான நம்பிக்கையை இன்று ஏற்படுத்தியுள்ளது அதனுடைய உயர்ச்சியும் தொடர்ச்சியுமாகத்தான் இச்சஞ்சிகையின் வெளியீடு அமைந்துள்ளது' எனவும் சு.ப.தமிழ்ச்செல்வன் தனது சிறப்புரையில் தெரிவித்தார்.

Thursday, November 01, 2007

செக்ஸ் டாய்ஸ் கடையில் சாருநிவேதிதா

இன்று கடந்த வார இந்தியா டுடேயின் செக்ஸ் சர்வே பற்றிய கவர்ஸ்டோரி கொண்ட புத்தகத்தின் விருந்தினர் பக்கத்தில் கழிவறைகளில் கிடக்கும் ஆணுறைகள் என்ற தலைப்பில் ஒரு நல்ல கட்டுறை எழுதியிருக்கிறார் அதாவது ......

"பிபிஓ அலுவலக கழிவறைகள் ஆணுறைகளால் நிரம்பி அடைத்துக் கொண்டு கிடப்பதாகவும் இதில் இருந்தே மத்திய தர மக்களின் பாலியல் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்" என்றும் எழுதிஉள்ளார். மேலும் பதினாறு வயதில் பெண்கள் திருமணம் செய்துகொள்ள அணுமதி வழங்க வேண்டும் எனவும் பாலியல் தொழிலை அங்கீகாரப் படுத்த வேண்டும் செக்ஸ் டாய்ஸ் எனப்படும் பாலுறவு பொம்மைகள் விற்கும் கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் விரைவான விவாகரத்துக்களுக்கு சட்டம் இடம் தர வேண்டும் எனவும் எழுதியுள்ளார். வழக்கம் போல (குஷ்பு சொன்னதை) தவறாக புறிந்து கொள்ளப்படும் அபாயங்கள் நிறைந்த கருத்து !!

சாருவின் கொடும்பாவியை யாராவது கலாச்சார காவலர்கள் கொளுத்தும் முன் அவரே சொன்ன மாதிரி எங்காவது பாரீஸில் அவர் நண்பர் நடத்தும் செக்ஸ் பொம்மைகள் விற்கும் கடையில் வேலை பார்ப்பது நல்லது

:)